Monday, November 15th, 2010
சென்னை கொசுத் தொல்லை பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கொசுக்கடி சிறு பிரச்சினையாகத் தோன்றினாலும் அவற்றின் மூலம் மலேரியா காய்ச்சல், டெங்கிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
சென்னை என்றதும் அங் குள்ள கொசுத் தொல்லையும் பெரிய குறையாகப் பேசப்பட்டு வருவதால், இந்தக் குறையை நிவர்த்தி செய்ய சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.
தெருக்களில் நாள் தோறும் கொசு ஒழிப்புப் புகை அடித்தல், நீர் நிலைகளில் மருந்து தெளித் தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.