செய்தி

Wednesday, October 27, 2010
Indonesia
Wednesday, October 27th, 2010

வின் ஜாவா பகுதி மக்கள் ஏற்கனவே அங்குள்ள சக்திவாய்ந்த மெரப்பா எரிமலை எப்போது குமுறும், எத்தனை பேரின் உயிரை பறிக்கப் போகிறது என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். இந்த நேரத்தில் நில நடுக்கமும் குட்டி சுனாமியும் எரிமலையின் குமுறலும் அந்நாட்டு மக்களை மேலும் அச்சுறுத்தியுள்ளது.

Wednesday, October 27th, 2010

அடுத்த ஆண்டின் சிங்கே அணி வகுப்பு மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“கடந்த 39 வருட சிங்கே வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகச் சிறந்த அளவில், பிரமாண்டமாக சிங்கே ஊர்வலம் இடம்பெறும்,” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் சிங்கே 2011 ஊர்வலத்தின் தலைவர் திரு நா ஜுவே ஹெங்.
இந்த பெரும் ஊர்வலத்தில் இந்திய, மலாய் ஊர்வலங்கள் பெரிய அளவில் இடம்பெறு கின்றன. மொத்தம் 94 இந்திய நற்பணி மன்றங்கள் மற்றும் இதர தோழமை சங்கங்கள் இணைந்து சிங்கே ஊர்வலத்தில் பலநூறு பங்கேற்பாளர்களைக் கொண்ட அணியை களம் இறக்க விருக்கிறது.

Wednesday, October 27th, 2010

தேவைக்கேற்ப கட்டப்படும் புதிய இரண்டு திட்டங்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று தொடங்கியது. இத்திட்டங்களின் மூலம் செங்காங் மற்றும் புக்கிட் பாஞ்சாங் பகுதிகளில் 1,322 வீடுகள் கட்டப்படும்.
வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் வீவக செயல்படும்.
ஸ்டுடியோ வீடுகளைத் தவிர்த்து பொது விநியோக முறையின் கீழ் 95 விழுக்காட்டு வீடுகள் முதன் முறையாக விண்ணப்பிப்போருக்கு ஒதுக்கப்படும்.

thailand-flood
Sunday, October 24th, 2010
அடுத்த வாரம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கின் வடக்கிலிருந்து வரும் வெள்ள நீர் பேங்காக்கை நிலைகுலையச் செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தாய்லாந்து அரசாங்கம் வெள்ள நீர் அபாயத்தை போர்க்கால கதியில் எதிர்கொள்ள தலைநகர் பேங்காக்கில் நடவடிக்கை மையம் ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாக ஏஷியா ஒன் செய்தி நிறுவனத் தகவல் கூறுகிறது.
Wednesday, October 27th, 2010
அறுபது ஆண்டுகளாக கொரிய போரினால் பிரிந்திருக்கும் குடும் பங்களை இணைக்க  வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த  வலியுறுத்தப்போவதாக தென் கொரியா தெரிவித்தது. 
வடக்கின் கேசாங் நகரில் கொரிய நாடுகளுக்கான செஞ் சிலுவை சங்கம், பேச்சுவார்த்தை நடந்து வருவதாக “தென்கொரிய ஒன்று சேர்க்கும் அமைச்சக”த் தின் செய்தி தொடர்பாளர், செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். 
‘எங்களால் முடிந்த வரை பிரிந்த குடும்பங்களை இணைக்க அனைத்துவிதமான முயற்சிகளையும்  மேற்கொள் வோம்’ என்று தென்கொரியக் குழுவின் தலைவர் கிம் யாங் ஹ்யுன், இருபது பேர் கொண்ட வடகொரிய குழுவிடம் கூறினார். 
Syndicate content