இளையர் முரசு

Vadi
Thursday, January 12th, 2012

 ‘என்ன நான் சொல்வது...’

"கைலியை இறுக்கிக் கட்டுங்கள்"

கைலி அவிழ்ந்து கீழே விழும் முன் உன் கை எப்படி உடனே மானத்தைக் காக்க அதைப் பிடித்து இழுத்து இடுப்பில் மாட்டிக் கொள்கிறதோ, அதுபோல் இருக்க வேண்டும் உண்மை நண்பன் என்றான் என் நண்பன் ஒருவன்.
இது ஒன்றும் புதிய சித்தாந்தம் அல்ல. திருவள்ளுவரே, ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்று சுருக்கி அழகு தமிழில் சொல்லி இருக்கிறார்.

முழு விவரம் 12.1.2012 தமிழ் முரசில்

---------------------------- ---------------------------- ---------------------------- ----------------------------

இளையர் முரசில் ‘என்ன நான் சொல்வது...’ என்ற புதிய பகுதியில் வழக்கறிஞரும் உள்ளூரின் பிரபல கலைஞருமான திரு வடிவழகன் தொடர்ந்து எழுதுவார்.

GCEO-RITHIKA
Thursday, January 12th, 2012

- முகம்மது ஹாஷிம் -

முயற்சியின் விசையில் தடைகள் தகர்க்கப்படும். இந்த மந்திரத்தை தமது வெற்றிக்கு மூலாதாரமாகக் கொண்டு செயல்பட்டு வெற்றியும் பெற்றுள்ளார் மாணவி ரிதிகா ரமேஷ், 16.

கடந்த ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வில் ஒன்பது பாடங்களில் ஏ1 தேர்ச்சி பெற்று கிரசெண்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தலைசிறந்த மாணவர்களுள் ஒருவராக ரிதிகா சிறப்பு பெற்றார்.

முழு விவரம் 12.1.2012 தமிழ் முரசில்

soccer-mathu
Thursday, January 12th, 2012

- தமிழவேல் -

கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடைபவரல்ல மது மோகனா, 21. 1.81 மீட்டர் உயரம் கொண்ட இந்த இளையர், மேலும் மேலும் திறன்களை வளர்த்துக்கொண்டு சாதிக்கத் துடிப்பவர்.

முன்பு சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் காற்பந்து அணியிலும் பின்பு உட்லண்ட்ஸ் காற்பந்து அணியிலும் இடம்பெற்ற தற்காப்பு ஆட்டக்காரர் மது மோகனாவுக்கு லயன்ஸ்Xll அணியிலிருந்து அழைப்பு வந்தபோது அவருக்கும் அவரது தந்தைக்கும் அளவிட முடியாத மகிழ்ச்சி உண்டானது.
முழு விவரம் 12.1.2012 தமிழ் முரசில்

soccerpraveen
Thursday, January 12th, 2012

- ப. பாலசுப்பிரமணியம் -

உயரம் 1.76 மீட்டர், எடை 72 கிலோ, வயது 18. மலேசிய சூப்பர் லீக் ஆட்டங்களில், மத்திய திடல் ஆட்டக்காரரான பிரவீன் குணசேகரன், 28 பேர் கொண்ட லயன்ஸ்XII குழுவில் இடம்பெறும் ஆக இளைய வீரராக திகழ்கிறார்.

உடல் வலிமையை பயன்படுத்தி எதிர்தரப்பு தாக்குதல்களை முறியடிப்பதும் தன் விருப்பான விளையாட்டாளர் ஸ்டீவன் ஜெராட்டைப் போல ‘பெனல்ட்டி’ வட்டத்துக்குள் வெளியிலிருந்து அபாரமாக கோல் போடுவதும் இவரது தனித்துவ விளையாடும் பாணி.

உள்நாட்டில் தொடங்கிய பிரவீனின் காற்பந்து பயணம் ஆஸ்திரேலியா வரை சென்றுள்ளது. சூகுன் தொடக்கப் பள்ளி குழுவிற்காக இவர் அடித்த கோல் வேட்டையைக் கண்டு இவரின் பயிற்றுவிப்பாளர் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் இவரை சேருமாறு ஆலோசனை வழங்கினார்.

முழு விவரம் 12.1.2012 தமிழ் முரசில்

lionsxii
Thursday, January 12th, 2012

தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் பயிலும் 17 வயது எஸ்.சசிகுமாருக்கு, புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. “மலேசிய கிண்ண காற்பந்துப் போட்டி ஒரு புதிய அனுபவம். சிங்கப்பூரர்களும் மலேசியர்களும் விளையாடுவதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளது,” என்றார் காற்பந்தாட்டப் பிரியரான சசிகுமார்.
“மலேசிய கிண்ண போட்டிகள் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக் கிறேன். யூடியூப் வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும் என நான் நினைத்ததில்லை. இப்போது அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது,” என்றார் சசிகுமார்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டும் மலேசிய சூப்பர் லீக் என்ற மலேசிய கிண்ண போட்டியில் போட்டியிடுகிறது.

முழு விவரம் 12.1.2012 தமிழ் முரசில்

samarppanam
Thursday, December 22nd, 2011

- ஹேமா பாலகிருஷ்ணன் -

இளையர்களின் திறமைக்கு சவாலாக அமைந்தது கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் பலதுறை தொழிற் கல்லூரி படைத்த சம்ர்ப்பணம் நிகழ்ச்சி.

கல்லூரியின் இந்திய கலாச்சார மன்றம் படைத்த இந்தப் பெரிய கலாசார நிகழ்ச்சி, நகைச்சுவையை மையமாகக் கொண்டு தயாரிக்கப் பட்டிருந்தது.

நாடகம், நடனம், இசை என முக்கலைகளையும் இணைத்து கண்ணுக்கும் செவிக்கும் விருந்து படைத்தனர் இளையர்கள்.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ஆண்டுக் கலை நிகழ்வான சமர்ப்பணம் இந்த ஆண்டு, 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

அதையொட்டி “மூன்று சுவடுகள்” என்ற நாடகத்தைப் பெரிய அளவில் அரங்கேற்றினர் மாணவர்கள்.

-- சமர்ப்பணம் படங்கள்

 

Monday, December 12th, 2011

- து அழகிய பாண்டியன், மூத்த எழுத்தாளர் .

Sunday, November 6th, 2011
- து அழகிய பாண்டியன், மூத்த எழுத்தாளர் - சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியில் பத்து வார சோதனை முயற்சிக்குப் பிறகு 85 விழுக்காட்டு மாணவர்களின் எழுத்துத் திறன் அதிகரித்திருக்கிறது. தமிழ் மொழி கற்பித்தலில் பல அணுகுமுறைகளை நம் தமிழாசி ரியர்கள் பின்பற்றி வருகிறார்கள். சிராங்கூன் கார்டன் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த இரண்டு தமிழாசிரியர்கள் தங்கள் மாணவர்களின் எழுத்தாற்றலை உயர்த்தும் நோக்கத்தோடு தமிழ் முரசைக் கையிலெடுத்தனர். அதற்குக் கைமேல் பலனையும் பெற்றிருக்கின்றனர். சிராங்கூன் கார்டன் உயர் நிலைப் பள்ளியின் தமிழ், மலாய் பாடத்துறை தலைவர் திருமதி பூபதி (60), தமிழாசிரியை குமாரி அ.
Syndicate content