இளையர் முரசு

singapore arts festival 2012
Thursday, May 10th, 2012
சிங்கப்பூர் கலைவிழா கோலாகல ஏற்பாடுகளுடன் மே 18 தொடங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது,

 விவரம்: அச்சுப் பிரதியில்
elayar murasu
Thursday, May 10th, 2012

அரங்கம் நாடகம். இளையர்கள் மேடை ஏற்றிய நாடகம். என்ன புதுமை?, என்ன பெருமை? இளையர் முரசில் ஒரு கருத்தோட்டம்.


விவரம்: அச்சுப் பிரதியில்

saratha kinder
Sunday, April 15th, 2012
- முஹம்மது ஹாஷிம் -

மழலையின் சிரிப்பில் கவலையை மறக்கலாம் என்பார்கள். ஆனால் அக்குழந்தையின் சிரிப்பழகு பல் சொத்தையால் சிதைக்கப்பட்டால் அந்த மகிழ்ச்சி நிலைக்குமா?
அதிகமான பிள்ளைகள் கடுமையான பல் சொத்தைப் பிரச் சினைகளுக்கு ஆளாகிறார்கள் என்று தேசிய பல் மருத்துவ நிலையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன.
பல் சொத்தையின் காரணமாக சில பிள்ளைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்படவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, பல் சொத்தைப் பிரச்சினையின் காரணமாக தேசிய பல் மருத்துவ நிலையத்தில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள சிறு பிள்ளை களின் எண்ணிக்கை 500க்குக் குறைவாக இருந்தது.

விவரம்: அச்சுப் பிரதியில்
tm logo
Thursday, April 12th, 2012
உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ் நாடகப் போட்டியான ‘புயல் 2012’ வரும் ஏப்ரல் 21ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
மாலை 5.00 மணியளவில்  நன்யாங் தொடக்கக் கல்லூரி அரங்கம் எண் 4இல் (LT4) போட்டி நிகழ்ச்சி தொடங்கும்.

விவரம்: அச்சுப் பிரதியில்
sorkalam2012
Thursday, April 12th, 2012
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ‘சொற்களம் 2012’ விவாதப் போட்டியின்  இரண்டாம் அரையிறுதிச் சுற்று வசந்தம் ஒளிவழியில் மாலை 7.00 மணிக்கு நேரடி ஒளிபரப்பாகும். “இன்றைய இளையர்களிடம் அலட்சியமும் ஆடம்பரமும் அதிகரித்துள்ளன” என்ற தலைப்பை ஒட்டி பெண்டமிர் உயர்நிலைப் பள்ளியும் தலைப்பை வெட்டி செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூஷனும் சொற்போர் புரியவுள்ளன.

விவரம்: அச்சுப் பிரதியில்
tm logo
Thursday, April 12th, 2012
உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ் நாடகப் போட்டியான ‘புயல் 2012’ வரும் ஏப்ரல் 21ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
மாலை 5.00 மணியளவில்  நன்யாங் தொடக்கக் கல்லூரி அரங்கம் எண் 4இல் (LT4) போட்டி நிகழ்ச்சி தொடங்கும்.
சிங்கப்பூரில் தமிழ் நாடகக் கலையை வளர்க்கவும் மூத்த கலைர்களைச் சிறப்பிக்கவும் நன்யாங் தொடக்கக் கல்லூரியின் இந்தியப் பண்பாட்டுக் கழகம் பல ஆண்டுகளாக புயல் நாடகப் போட்டியை நடத்தி வருகிறது.
ஆரம்பத்தில் தொடக்கக் கல்லூரி, கல்வி நிலைய மாணவர் களுக்காக நடத்தப்பட்டு வந்த இப்போட்டி, நான்காண்டிற்கு முன்னர் உயர்நிலைப் பள்ளிகளுக் கான போட்டியாக மாற்றம் கண்டது.

விவரம்: அச்சுப் பிரதியில்
ilayar-jayasudha
Thursday, April 12th, 2012
- ஜெயசுதா சமுத்திரன் -
(சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல், தெற்காசிய கல்வி ஆகிய இரு துறைகளில் பட்டக் கல்வி பயில்கிறார். )

பேஸ்புக்கில் இந்திய‌ இளைய‌ர்க‌ள் எதைப் ப‌ற்றிப் பேசுகிறார்க‌ள்? ஒரு சில‌ ‘ஃபேஸ்புக் ஸ்டேட்ட‌ஸ்’கள்:
“உன் நினைவில் என்றும் நான். முய‌ற்சித்தாலும் ம‌றக்க‌ முடிய‌வில்லை. இந்த‌ வாழ்க்கையிலும் பொருள் இல்லை.”  
“உன்னை என் உல‌க‌ம் என்றேன். என் உல‌க‌த்தையே நொறுக்கிவிட்டு தூசு த‌ட்டி ந‌ட‌ந்து சென்றாய்.”
“என் இத‌ய‌த்தை உன்னிட‌ம் கொடுத்தேன் ப‌த்திர‌மாக‌, அதைத் திருப்பித் த‌ந்தாய் வெறும் பாத்திர‌மாக‌.”
ஃபேஸ்புக் பதிவுகள்தானே என்று இவற்றைப் பொருட் ப‌டுத்தாம‌ல் இருக்க‌ முனைந்தாலும் காற்று வாக்கில் காதில் வ‌ந்து சேரும் உண்மைச் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் வ‌ருத்த‌ம‌ளிக்கின்ற‌ன‌.
எந்த‌ப் ப‌ருவ‌த்தில் காத‌லிக்க‌ வேண்டும் என்ற‌ வாத‌த்திற்கே நான் வ‌ர‌வில்லை. இள‌ம் ப‌ருவ‌த்தில் துளிர்த்த‌ காத‌ல் ப‌த்தாண்டுக‌ளுக்குப் பிற‌கு முறிவ‌தையும் பார்க்கிறோம், உய‌ர்நிலைப்ப‌ள்ளிக் காத‌ல‌ர்க‌ள் பின் ந‌ல்ல‌தொரு குடும்ப‌த்திற்குத் த‌லைமை தாங்கி நிற்ப‌தையும் காண்கிறோம். அவ‌ர‌வ‌ர் கையில் உள்ள‌து அவ‌ர‌வ‌ர் காத‌லைக் க‌ல்விக்குப் பாதிப்பு நேராம‌ல் நிர‌ந்த‌ர‌மாக்கும் பொறுப்பு.
ஆனால், காத‌லுற‌வில் ‘எதையும் ச‌ந்திப்போம்’ என்று தைரிய‌மாக‌ இற‌ங்கும் இளைய‌ர்க‌ளுக்கு காத‌ல் முறிவுக‌ளை ஏற்றுக்கொள்வத‌ற்கு துணிவு மிக‌க் குறைவாக‌ இருக்கின்ற‌து என்ப‌தே என்னுடைய‌ ஆத‌ங்க‌ம்.
உள‌மார‌க் காத‌லித்துக் கைவிட்ட‌ காத‌லியின் நினைவில் நான்காண்டுப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ப் ப‌டிப்பை ஆறாண்டுக‌ளாக‌ப் ப‌யின்று வ‌ரும் ந‌ண்ப‌ரின் க‌தை. காத‌ல் தோல்வியில் ம‌ன‌முடைந்து ம‌ன‌தை ஆற்றுவ‌த‌ற்காக‌ புகை பிடித்த‌ல், ம‌து அருந்துத‌ல் என‌ போதையில் இற‌ங்கிய‌ தோழியின் க‌தை.
இப்ப‌டி ந‌ம்மில் ஒவ்வொருவ‌ருக்கும் சில‌ காத‌ல் தோல்வியினால் சிதைந்த‌ வாழ்க்கைக் க‌தைக‌ள் தெரியும்.
காத‌லென்ப‌து உண‌ர்ச்சி சார்ந்தது. இன‌ம்புரியா வ‌கையில் நுண்ணிய‌ இத‌ய‌ ந‌ர‌ம்புக‌ளை மீட்ட‌க்கூடிய‌து காத‌ல். இருந்த‌ காத‌ல் இல்லாம‌ல் போகும்போது இத‌ய‌ ந‌ர‌ம்புக‌ளே கிழிந்த‌ன‌ போன்ற‌ உண‌ர்வு ஆட்கொள்ளும். இந்நிலையில் எப்ப‌டி இயல்பாக இருப்பது என்பது ஒவ்வொரு காத‌ல் தோல்வியுற்ற‌ இளைய‌ரின் குமுற‌ல். ஒவ்வொரு த‌மிழ்த் திரைப்ப‌ட‌க் காத‌ல் சோக‌ கீத‌மும் வ‌லியுறுத்தும் அடிம‌ன‌ அர‌ற்ற‌ல்.
என் சொந்த‌ அனுப‌வ‌த்திலிருந்து சில‌ சிந்த‌னைத் துளிக‌ள்:
1. கேட்ப‌வ‌ரிட‌மெல்லாம் காத‌ல் தோல்வி ப‌ற்றிக் கூறி, க‌ண்ணீர் விட்டு, சோக‌க் க‌ட‌லில் உங்க‌ளையே மூழ்க‌டித்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், உங்கள் முன்னாள் காதலரோ பெரும்பாலான‌ நேர‌ங்க‌ளில், விட்ட‌து காத‌ல் என்று ப‌டிப்பிலோ வேலையிலோ க‌வ‌ன‌ம் செலுத்திக் கொண்டிருப்பார், அல்ல‌து இன்னொரு காத‌ல‌ரோடு ம‌கிழ்ச்சியாக‌ இருப்பார்.
“காத‌ல் தோல்வியினால்தான் என் ப‌டிப்பு கெட்ட‌து, வாழ்க்கை கெட்ட‌து,” என்று கூறுவதில் நியாய‌ம் இல்லை. உங்க‌ள் வாழ்க்கை உங்க‌ள் கையில். ஒவ்வொரு முடிவும் நீங்க‌ள் எடுக்கும் முடிவுக‌ளே. அவ‌ருடைய‌ நினைவில் நொந்துகொள்வ‌து என்ப‌து நீங்க‌ள் எடுத்த‌ முடிவு. வாழ்க்கை ம‌கிழ்ச்சியோடு வாழ்வ‌த‌ற்கே என்ப‌து அவ‌ர் எடுத்த‌ முடிவு. இருவ‌ரில் யாருக்கு லாப‌ம்?
2. ம‌துவிலும், போதையிலும், க‌ண்ணீரிலும், துய‌ர‌த்திலும் க‌ழிக்கும் நேர‌த்தை எப்படியெல்லாமோ பயன்படுத்தலாம். ப‌டிக்க‌லாம், ஆக்க‌க‌ர‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் ஈடுப‌ட‌லாம், ஆட‌லாம், விளையா‌ட‌லாம், எத்த‌னையோ ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ளைப் ப‌டித்து முடித்திருக்க‌லாம், எதையாவ‌து சாதித்திருக்க‌லாம்.
உல‌க‌மே நின்று விட்ட‌து என்று நீங்க‌ள் எண்ணிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும், உண்மையில் உலக‌ம் செவ்வ‌னேதான் இய‌ங்கிக் கொண்டிருக்கின்ற‌து. நீங்க‌ள்தான் பொன்னான‌ நேர‌த்தையும் திரும்ப‌ப் பெற‌முடியாத‌ இள‌மைப் ப‌ருவ‌த்தையும் சிறுக‌ச் சிறுக‌ வீண‌டித்துக் கொண்டிருக்கிறீர்க‌ள்.
காத‌லில் தோல்வி அடைந்துவிட்டீர்க‌ள் என்ப‌த‌ற்காக‌ வாழ்க்கையிலும் தோல்வியைத் த‌ழுவ‌ நீங்க‌ள் த‌யாரா?
3. 'என‌க்கு ம‌ட்டும் ஏன் இப்ப‌டி ந‌ட‌க்கிற‌து?' என்று சுய பச்சாதாபத்தில் மூழ்குவதை விடுத்து, வெவ்வேறு வ‌ய‌தைச் சேர்ந்த‌ ப‌த்து பேரிட‌ம் பேசிப் பாருங்க‌ள். ஒவ்வொரு த‌னிம‌னித‌ரிட‌மும் ஒவ்வொரு சோக‌க் க‌தை இருக்கும்.
ந‌ம் சோக‌ம் தான் ஆக‌ப் பெரிய‌ சோக‌மென‌ எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், எப்பொழுது இன்னொருவ‌ர‌து சோக‌த்தைக் கேட்டுவிட்டு, என் காத‌ல் தோல்வியெல்லாம் இவ‌ருடைய‌ பிர‌ச்சி‌னையோடு ஒப்பிடுகையில் ஒரு பிர‌ச்சி‌னையே இல்லை என்று உண‌ர்கிறீர்க‌ளோ அப்பொழுது தான் விடிவுகால‌ம் உங்க‌ளுக்கு.
விவாக‌ர‌த்தான பெற்றோர்க‌ள், ப‌ணமுடையினால் வறுமையில் உழ‌லும் குடும்ப‌ம், குடும்ப‌ச் சுமையைப் ப‌ள்ளிப் ப‌ருவ‌த்தில் சும‌க்கும் மாணவர், சிறு வ‌ய‌தில் க‌ருவுற்று ‌ ந‌ட்டாற்றில் கைவிட‌ப்ப‌ட்ட‌ பெண், இப்ப‌டி எத்த‌னையோ அதிர‌ வைக்கும் உண்மைக் க‌தைக‌ள் ந‌ம் எல்லோருக்கும் தெரியும். இவ‌ற்றிலிருந்து மீண்டு வ‌ந்த‌வ‌ர்க‌ளையும் தெரியும். அவர்களோடு ஒப்பிடுகையில், ம‌ன‌தைத் தொட்டுச் சொல்லுங்க‌ள், உங்க‌ள் காத‌ல் தோல்வியெல்லாம் வாழ்க்கையைப் பாதிக்க‌ வேண்டிய‌ ஒரு விஷய‌மா?
4. காத‌ல் என்ப‌து வாழ்க்கையின் ப‌ல‌ அனுப‌வ‌ங்க‌ளுள் ஒன்று. காதலிப்ப‌த‌ற்கு முன் உங்க‌ள் வாழ்க்கை காலியாக‌வா இருந்த‌து? சிறிது கால‌த்திற்கு உள்ள‌த்தை நெருடிக் கொண்டிருக்கும் முள்ளாக‌வே இந்தக் காத‌ல் தோல்வியும் சோக‌மும் பாதித்துக்கொண்டிருக்கும். அந்த‌ முள்ளை எடுத்தெறிவ‌தும், பாதுகாத்துப் பேணுவ‌தும் உங்க‌ள் கைகளில் உள்ள‌து. முள்ளைப் பிடுங்கி எறிந்துவிடுங்க‌ள், காய‌த்தில் சிறிது நேர‌ம் ரத்த‌ம் பெருக்கெடுக்கும். பிற‌கு கால‌ம் அந்த‌க் காய‌த்தை ஆற்றிவிடும், த‌ழும்புக‌ளே நினைவுகூறும், இன்னும் சில‌ கால‌ம் க‌ழித்து காய‌த்தின் அடையாள‌மே இருக்காது.
5. காத‌லுற‌வின் நினைவுக‌ளைப் புர‌ட்டிப் பார்க்கும் போது வலி இருக்கும். ஆனால் வ‌லியையும் தாண்டி ப‌ற்ப‌ல‌ ப‌டிப்பினைக‌ள் இருக்கும். அடுத்த‌ முறை யாரைக் காத‌லிக்கக் கூடாது, எப்ப‌டி ந‌ட‌ந்துகொள்ள‌வேண்டும் இப்ப‌டிப் ப‌ல‌ பாட‌ங்க‌ள். தேர்வில் தேர்ச்சிப் பெறாத‌போது சோக‌மிருக்கும், ஆனால் தேற்றிக்கொண்டு அடுத்த‌ தேர்வுக்கு ப‌யிற்சியில் தயாராகிறோம். காத‌ல் முறிவிலும் இதைப் பின்ப‌ற்ற‌வேண்டும்.
எல்லாம் ந‌ல்ல‌துக்கே என்ற‌ ம‌ன‌ப்பாங்கு தேவை. காத‌லையும் தாண்டிய‌ வாழ்க்கை ல‌ட்சிய‌ங்க‌ள் தேவை. யோசித்துப் பாருங்க‌ள். ஒரு வேலைக்கு விண்ண‌ப்பிக்கும் போது நீங்க‌ள் அனுப்பிவைக்கும் உங்க‌ள் resume ஆவ‌ண‌த்தில் குறைந்த‌ ம‌திப்பெண்க‌ளுக்கும், குறைவான‌ தேர்ச்சிக்கும் உள் குறிப்பாக ‘காத‌ல் முறிவு’ என்று கார‌ண‌ம் கூற‌முடியாது.
சித‌றிக் கிட‌க்கும் இத‌ய‌த் துக‌ள்க‌ளைப் பற்றிப் புல‌ம்ப ‌வேண்டாம். ம‌னித‌ இத‌ய‌ம் நாம் எண்ணுவ‌தை விட‌ வ‌லுவான‌து. ந‌ம்புங்க‌ள்.


ilayar-matheiw-12-4-12
Thursday, April 12th, 2012
மே 18, 19ஆம் தேதிகளில் எஸ்பிளனேட் அரங்கில் நடைபெற இருக்கும், ‘ஃப்லைட் ஆப் தீ ஜேட் பேர்ட்’, (Phlight of the jade bird) என்னும் ஓப்ராவில் முன்னணி கதாபாத்திரமாக மேத்யூ பங்கேற்க உள்ளார். இந்த இசை நாடகத்தில் பாடுவதுடன் நடிக்கவும் உள்ளார்  மேத்யூ. சிங்கப்பூர் கலை விழாவின் துவக்க நிகழ்ச்சியாக நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சி உலகில் முதன் முறையாக சிங்கப்பூரில்தான் மேடையேறுகிறது. நவம்பர் மாதம் ஹாங்காங்கில் நடைபெற உள்ள, ஹாங்காங் நியூ விஷன் விழாவிலும் இவர் கலந்துகொள்வார். படம்: அருண் ராமு

விவரம்: அச்சுப் பிரதியில்
Thursday, April 5th, 2012

உயர்நிலைப் பள்ளி மாணவருக்கான முகாம்

தேசிய பல்கலைக்கழகத்தில், கதிரொளி என்னும் உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தன்முனைப்பு முகாமை நடத்த இருக்கின்றனர்.
கதிரொளி முகாம், மாணவர்களை அவர்களது எதிர்கால கல்விக்கும் மேற்படிப்பு களுக்கும் தயார்படுத்துவதற்காக தேசிய பல்கலைக்கழகத்தின் இந்தியர் கலாசார மன்றத்தைச் சேர்ந்த மாணவர்களின்    ஏற்பாட்டில் நடைபெற இருக்கிறது.
இளையர்கள் சுயமாக முடிவு களை எடுத்து, தன்முனைப்புடன் எதிர்கால சவால்களை எதிர் கொள்ளும் திறனை இந்த  முகாமின் நிறைவில் பெறுவர்   என்று ஏற்பாட்டாளர்கள் நம்பு கின்றனர்.
மாணவர்கள் கற்க வேண்டிய பலவற்றை இம் முகாம் வழங்கினாலும் கேளிக்கைக்கும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் குறை விருக்காது.
ஜூன் 12லிருந்து 15 வரை நடைபெறும் இம்முகாம், தேசிய பல்கலைக் கழகத்தின் ராஃபிள்ஸ் அரங்கில் நடைபெறும்.
அந்த நான்கு நாட்களில், பலதரப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, சிங்கப்பூரிலுள்ள சில கல்வி நிலையங்களுக்கும், செந்தோசா தீவிற்கும் மாணவர் கள் அழைத்துச் செல்லப்படுவர்.
எம்டிஐஎஸ், எஸ்ஐஎம் போன்ற கல்வி நிலையங்களுக்குச் சென்று, வழங்கப்படும் பாடங்கள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்வர்.
செந்தோசாத் தீவிற்குச் சென்று குழு ஒற்றுமையை வலுப்படுத்தும் சில விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
தொடக்கக் கல்லூரிகள், பலதுறை தொழிற் கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப கல்விக் கழகங்கள் பற்றிய பட்டறைகள் வழங்கப்படும்.
முகாமின் நிறைவில், ‘திறமை நேரம்’ எனப்படும் போட்டி அங்கமும் நடைபெறும். இப்போட்டியின் போது, மாணவர்கள் தங்களது தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவர். முகாம் முழுவதும், துடிப்புடனும், திறமையோடும் செயலாற்றிய, மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும்.
தங்களது ‘என்’, ‘ஓ’ நிலைத் தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்கள், அந்த தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்வதோடு, சரியான உயர் கல்விப் பாதையை தெரிவு செய்ய வேண்டும் என்பதும் முகாமின் முக்கியக் குறிக்கோளாகத் திகழும்.
மேலும், குழு ஒற்றுமை, தலைமைத்துவம், தன்னம்பிக்கை, போன்றவற்றையும் மாணவர்கள் கற்றுக்கொள்வர்.
முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலமாகப் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த முகாம் குறித்து மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: nusics@gmail.com

Thursday, April 5th, 2012

வெங்காயம் ஆநியனாக மாறிவிடக் கூடாது

இந்தியாவில் வேலை செய்து கொண்டிருந்த நேரம் அது. ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது வயிறு கலக்கிக் கொண்டிருந்தது.
அம்மாவின் கைவைத்தியம் ஞாபகம் வந்தது. ஓமத் தண்ணீர் குடித்தால் வயிறு சரியாகி விடும் என்பது நினைவுக்கு வந்தது.  
உடனே  வாகனம் ஓட்டும் அருணிடம் “ஓமத் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டேன்.
“அப்படின்னா என்ன சார்?” என்று அவர் திருப்பிக் கேட்டார்.
நான் ஏதோ அது சிங்கப்பூர் சமாச்சாரம் போலிருக்கிறது. இங்குள்ளவர்களுக்குத் தெரியாது போலும் என்று விட்டுவிட்டேன்.
ஆனால் ஒரு பதினைந்து நிமிடம் கழித்த பிறகு அருண் ஏதோ உதித்ததுபோல், “சார் எங்கம்மா ஓம வாட்டர் குடிக்கச் சொல்லுவாங்க சார்” என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
ஓமத் தண்ணீரை தன்னையறியாமல் அவர் ஆங்கிலத்தில் சொல்கிறார் என்பது நான் சொல்லித்தான் அவருக்குத் தெரியவந்தது. பிறகு மௌனமாக வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.
சென்னையை அடைந்தவுடன் அருணிடம், “சங்கீதா உணவகத்திற்குச் செல்லலாம்,” என்றேன். ஏனெனில் அந்த சங்கீதா உணவகத்தில் வாகனத்தை நிறுத்தியவாறு சிற்றுண்டி சாப்பிடலாம்.
உணவகத்திற்கு சென்ற கையோடு வயிறு சரியாக இல்லாவிட்டாலும் வாய்க்கு ருசியாக பட்ஜி சாப்பிடலாம் என முடிவெடுத்து உணவு பரிமாறுபவரைக் கூப்பிட்டேன். அவர் “என்ன சார் வேண்டும்?” என்றார்.
நான் “உருளைக் கிழங்கு பட்ஜி, வெங்காய பட்ஜி கலந்து கொடுங்கள்,” என்றேன்.
அவர் உடனே, “சார் அதெல்லாம் இல்லை. ஆநியன் பட்ஜி, பொட்டாட்டோ பட்ஜிதான் இருக்கிறது,” என்றார்.
நான் ஒரு கனம் மலைத்துப் போய் விட்டேன். இப்பொழுது நான் அதைத்தானே தமிழில் கேட்டேன் என்ற பார்வையோடு அருணைப் பார்த்தேன்.
அவர் தாங்கமுடியாமல் சிரித்தவாறு, “யோவ், சார் அதைத்தான் தமிழில் கேட்டார். ஏன்யா தமிழன் மானத்தை வாங்குறே” என்று அவர் உணவு பரிமாறுபவரிடம் வசனம் பேசினார்.
இந்த நிலையைப் பார்த்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
இந்த நிலை எனக்கும் வந்துவிடக் கூடாது. என் நண்பர்களுக்கும் வந்துவிடக் கூடாது என்பதால் என் தமிழ் நண்பர்களைப் பார்த்தால் தமிழிலேயே உரையாட முயற்சி செய்கிறேன். அப்பொழுதுதான் வெங்காயம் வெங்காயமாக இருக்கும்.  ஆநியனாக மாறிவிடாது.
என்ன நான் சொல்வது?

Syndicate content